Yours விஜய் படத்தில் இரட்டை எழுத்தாளர்கள் !விஜய்யின் வேலாயுதம் படத்தை விஜய்யை போலவே ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் ஆர்வமாக எதிர்பார்க்கிறார்கள். விஜய் படத்தில் கதை இருக்காது அல்லது ஒரேவிதமான கதைதான் இருக்கும் என்ற குற்றச்சாற்றை வேலாயுதம் பொடிப் பொடியாக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புக்கு காரணம். ஜெயம் ராஜா இயக்கிய நான்கு ப...டங்களுமே கதையின் வலிமையால் வெற்றி பெற்றவை. குடும்பமாக உட்கார்ந்து பார்ப்பதற்கு உத்தரவாதம் தருபவை. வேலாயுதம் படத்திலும் அடர்த்தியான கதை இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. மேலும் படத்தின் வசனம் எழுதும் பொறுப்பை இரட்டை எழுத்தாளர்களான சுபாவிடம் ஒப்படைத்திருக்கிறார் ஜெயம் ராஜா. கே.வி.ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்களான இவர்கள் கனா கண்டேன், அயன் படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர்கள். கோ படத்துக்கும் இவர்களே வசனம். கதை ஏரியா ஸ்ட்ராங்காக இருப்பதால் வேலாயுதம் வெற்றி பெறும் என்கிறார்கள். நம்புவோம் ! VIJAYveriyan- |
__._,_.___
MARKETPLACE
.
__,_._,___
0 comments:
Post a Comment